சேலம் மத்திய மாவட்டம், திமுக இளைஞர் அணி நடத்திய கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டியில் அரசு பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இரண்டாம் ஆண்டு மின்னணு மற்றும் தொடர்பியல் துறை மாணவி ம. ராஜஸ்ரீ, மண்டல அளவிலான பேச்சுப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றதற்காக ரூபாய் 10,000 நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் பெற்றார். இரண்டாம் ஆண்டு உலோகவியல் துறை மாணவி மா. ஸ்ரீஜா போட்டியில் பங்கேற்று நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் பெற்றார். கல்லூரி முதல்வர் முனைவர். இரா. விஜயன் அவர்கள் மற்றும் தமிழ் இலக்கிய மன்ற பொறுப்பாசிரியர் முனைவர். ப. சக்திவேல் ஆகியோர் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களைப் பாராட்டினர்.
Dr. V . Geetha M.E.,Ph.D
Principal (FAC)