Skip to main content

06.01.2024 அன்று தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் ‘மண்வாசனை’ என்ற பொங்கல் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது

சேலம், அரசு பொறியியற் கல்லூரியில் 06.01.2024 அன்று தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் ‘மண்வாசனை’ என்ற பொங்கல் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழ் இலக்கிய மன்றத்தின் செயலாளர், ச. செந்தில் முருகன் என்ற இயந்திரவியல் துறை மாணவர் வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவில் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் திரு. பாரதி கிருஷ்ணகுமார் சிறப்பு விருந்தினாரக் கலந்து கொண்டு விழா பேருரை ஆற்றினார். இவ்விழா கல்லூரி முதல்வர், முனைவர். இரா. விஜயன் அவர்களின் தலைமையில், பொறுப்பாசிரியர் முனைவர். ப. சக்திவேல் அவர்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. தமிழரின் பண்பாட்டு, பாரம்பரித்தோடு பொங்கல் வைக்கப்பட்டு, மாணவர்களால் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சுமார் 500 மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, ஆரவாரத்தோடு விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழ் இலக்கிய மன்றத்தின் செயலாளர், ம. செளந்தரியா என்ற அமைப்பியல் துறை மாணவி நன்றியுரை வழங்கினார்.